×

கெஜ்ரிவால் கோரிக்கை தன்கர் மறுப்பு

புதுடெல்லி: ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை தலைவராக சஞ்சய் சிங் இருந்து வந்தார். இவர் தற்போது டெல்லி மதுபான முறைகேட்டில் சட்ட விரோத பண பரிமாற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். இதனால், ராகவ் சதாவை மாநிலங்களவையில் ஆம் ஆத்மி கட்சியின் இடைக்கால தலைவராக நியமிக்க கோரி அவைத் தலைவர் ஜெகதீப் தன்கருக்கு ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 14ம் தேதி கடிதம் எழுதி இருந்தார். இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களைவை தலைவராக ராகவ் சதாவை நியமிக்க அவைத் தலைவர் ஜெகதீப் தன்கர் மறுத்துள்ளார். இடைக்கால தலைவரை நியமிக்க சட்டத்தில் இடமில்லை என்று தன்கர் குறிப்பிட்டுள்ளார்.

The post கெஜ்ரிவால் கோரிக்கை தன்கர் மறுப்பு appeared first on Dinakaran.

Tags : Kejriwal ,New Delhi ,Sanjay Singh ,Rajya Sabha ,Aam Aadmi Party ,Delhi ,Raghav Sadha ,
× RELATED பெண் எம்.பியை தாக்கியவர் மீது கடும் நடவடிக்கை ஆம் ஆத்மி உறுதி